வெள்ளி, 18 டிசம்பர், 2009

மீன்​பி​டித் தொழில் மசோதா: மத்​திய அர​சுக்கு கரு​ணா​நிதி நன்றி



சென்னை, ​​ டிச.17:​ மீன்​பி​டித் தொழில் மசோதா ஒத்​தி​வைக்​கப்​பட்​ட​தற்​காக மத்​திய அர​சுக்கு முதல்​வர் கரு​ணா​நிதி நன்றி தெரி​வித்​துள்​ளார்.​"உரிய நேரத்​தில் எடுக்​கப்​பட்ட முடிவு' என்று தனது கடி​தத்​தில் கூறி​யுள்​ளார்.​இது ​கு​றித்து மத்​திய வேளாண்​மைத் துறை அமைச்​சர் சரத்​ப​வா​ருக்கு முதல்​வர் கரு​ணா​நிதி வியா​ழக்​கி​ழமை எழு​திய கடி​தத்​தின் விவ​ரம்:​""மீன் ​பி​டித் தொழில் ஒழுங்கு முறை மசோதா குறித்து,​​ தங்​க​ளின் ​(சரத்​ப​வார்)​ கவ​னத்​துக்கு கொண்டு வந்​தேன்.​ மேலும்,​​ எனது அறி​வு​ரையை ஏற்று மத்​திய அமைச்​சர் தயா​நிதி மாற​னும் இந்​தப் பிரச்னை குறித்து உங்​க​ளி​டம் பேசி​னார்.​இந்த நிலை​யில்,​​ இந்த மசோதா குறித்து இறுதி முடி​வெ​டுப்​ப​தற்கு முன்​பாக மீன​வர்​க​ளு​டன் விரி​வாக ஆலோ​சிக்​கப்​ப​டும் என்று தெரி​வித்​துள்​ளீர்​கள்.​ இதற்கு ​தமி ​ழக மீன​வர்​கள் சார்​பில் எனது நன்​றி​யைத் தெரி​வித்​துக் கொள்​கி​றேன்.​ நாடா​ளு​மன்​றத்​தின் நடப்பு கூட்​டத் தொட​ரில் இந்த மசோதா தாக்​கல் செய்​யப்​ப​டாது எனத் தெரி​வித்து உள்​ளது மகிழ்ச்சி தரு​கி​றது.​ மீன​வர்​கள் பிரச்னை தொடர்​பாக,​​ உரிய நேரத்​தில் எடுக்​கப்​பட்ட முடிவு இது என்று தனது கடி​தத்​தில் முதல்​வர் கரு​ணா​நிதி தெரி​வித்​துள்​ளார்.
கருத்துக்கள்

காங்கிரசைப் பொறுத்த வரை ஒத்தி வைப்பது என்றால் அமைதியாக நிறைவேற்றவதுதான். இதற்குப் போய் நன்றி தெரிவித்துத் தன் நிலையில் இருந்து கீழிறங்கி வெட்கமும் வேதனையும் படவைத்து விட்டாரே கலைஞர் அவர்கள். எதற்கும், பவாரின் செல்வாக்கு உயரும் பொழுது உதவியாக இருக்கட்டும் என்று நன்றி தெரிவித்தாரா? அல்லது ஈழப் போரை நிறுத்தியதாகக் கூறி நன்றி தெரிவித்தது போன்று நன்றி தெரிவித்துப் பெருமைப் பட்டியலில் சேர்க்கவும் துதிபாடும் சுவரொட்டிகள் அச்சிட்டு ஒட்டப்படவும் நன்றி தெரிவித்தாரா? தமிழ்நாட்டு முசிபூர் இரகுமான் அவர்களே! உங்களின் இனவுணர்வு பழங்கதையாய்ப் போக வேண்டா! அறிக்கை எண்ணிக்கையின் கூடக் கூட உங்களின் செல்வாக்கு சரிவதை உணருங்கள்! உங்களை நம்பியுள்ள மக்களுக்காக - நாட்டு மக்களுக்காக - ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டே உரிமைக் குரல் எழுப்பி வெற்றி காணுங்கள்!

உங்கள் அன்பர்களில் ஒருவனான

இலக்குவனார் திருவள்ளுவன்

By ilakkuvanar thiruvalluvan
12/18/2009 7:06:00 AM

!!!! மசோதா ஒத்திவைக்கப்பட்டதற்காக நன்றியா ada kadavule you too smart /////

By appavi tamilan
12/18/2009 6:01:00 AM

மசோதா ஒத்திவைக்கப்பட்டதற்காக நன்றியா? இந்த மசோதாவையே நீக்கவல்லவா கருணா போராடியிருக்கவேண்டும்! இந்த மசோதா ஒத்திவைக்கப்பட்டதற்காக நன்றியா? இந்த மசோதா மீண்டும் கொஞ்சம் நாள் கழித்து வரப்போகின்றது!

By ராஜாசெழியன் - மதுரை
12/18/2009 5:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக