55roadside_well
தேனி மாவட்டத்தில் மூடப்படாத சாலையோரக்கிணறுகள்
  தேனி மாவட்டத்தில் திறந்த வெளி சாலையோரக் கிணறுகளால் பேரிடர் ஏற்படும் கண்டம் உள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி, புல்லக்காபட்டி பகுதிகளில் சாலையோரத்தில் ஏராளமான கிணறுகள் உள்ளன. இக்கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்பட்டன. இப்பொழுது கிணறுகளில் நீர் நிரம்பி வழிகிறது. பெரும்பாலான கிணறுகள் சாலையோரத்தில் திரும்பும் இடத்தில் அமைந்துள்ளன.
  இருசக்கர வாகனங்கள், மிதியூர்திகள்(ஆட்டோக்கள்), சீருந்துகள், போன்றவை இப்பகுதியில் நாள்தோறும் கடந்து செல்கின்றன. இவ்வாறுள்ள சாலையோரக்கிணறுகளினால் இவ்வாறு கடந்து செல்வோர் தவறி  விழுந்து பலர் இறந்துள்ளனர்.
  இப்பொழுது பள்ளி மாணவர்கள், மாணாக்கியர்கள் மிதிவண்டிகளில் செல்கின்றனர். எதிரே வரும் வாகனங்கள் மீது மோதாமலிருக்க வாகனத்தைத் திருப்பும்பொழுது கிணறுகளில் உள்ள பள்ளத்தில் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே சாலையோரத்தில் அமைந்துள்ள கிணறுகளுக்குத் தடுப்புச்சுவர் கட்ட மாவட்ட நிருவாகம் உரியவர்களுக்குஅறிவுறுத்தவேண்டும் எனவும் இதனால் ஏற்படும் உயிர்ப்பலிகளைத் தடுத்து நிறுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 55vaikai aneesu