புதன், 29 செப்டம்பர், 2010

வேணும் கட்டைக்கு வேணும் வெங்கலக் கட்டைக்கு வேணும் என எண்ணியிருப்பர் உடன் பணியாற்றுவோர். ஏனெனில் பிடிபட்டவர் தான் மட்டுமே  பெறும் வகையில் பங்குகளைத் துறையினருக்குத் தராத வகையில்  கையூட்டு வாங்கி  பிடிபட்டுள்ளாரே தவிர வேறு அல்ல. எத்தனையோ கையூட்டுகள் குறித்தும் ஊழல்கள் குறித்தும் மொட்டைக் கடிதமாக
 இல்லாமல் முகவரியுடனும் ஆதாரங்களுடனும் புகார் அனுப்பியும் நடவடி்க்கை எடுக்காத துறைதான் ஊழல ஒழிப்புத்துறை.  எனவே, நதி மூலம்  ரிசீ மூலம் அறியாமல்  பாராட்ட வேண்டாம். இதனைப் படிக்கும் அத்துறையினருக்குச் சினம் வந்தால் என்னிடம் தொடர்பு கொள்ளவும். நான் சில ஊழல்களை ஆதார ஆவணங்களுடன் தெரிவிக்கின்றேன். நடவடிக்கை எடுக்கிறார்களா பார்ப்போம்.  கண்டிப்பாக அவ்வாறு நடந்து கொண்டு துறையின்  பெருமையை (?) க் காப்பாற்றிக் கொள்ள மாட்டார்கள். எனவே, ஊழல் ஒழிப்பு ஆய்வாளர் பிடிபட்டது ஒரு செய்தியே தவிர சாதனை அல்ல. உண்மையில் அவ்வாறு பிடிக்க வேண்டும் என்றால் எண்ணற்றோர் அத்துறையில் உள்ளனர். 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்


லஞ்சம் வாங்கிய லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கைது : வேலியே பயிரை மேய்ந்தது

மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 29,2010,00:07 IST



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக