திங்கள், 11 ஜூலை, 2011

thamizh kadamaigal 47.:தமிழ்க்கடமைகள் 47. வணிகத்தின் மையப்பகுதியாகத் தமிழகத் துறைமுகங்கள் விளங்கின

தமிழ்க்கடமைகள்

47. வணிகத்தின் மையப்பகுதியாகத் தமிழகத் துறைமுகங்கள் விளங்கின

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : July 11, 2011
..
உணவு உற்பத்தி மட்டுமின்றி தமிழகத் துறைமுகங்களில் நடைபெற்ற வெளிநாட்டு வாணிகமும் தமிழகத்தை நாகரிக முதிர்ச்சிக்கு இட்டுச் சென்றது. மத்திய கிழக்கு நாடுகளுடன் கிறித்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே (கி.மு.1000 ஆண்டளவில்) தமிழகத் துறைமுகங்கள் வாணிக நடவடிக்கையில் இணைந்திருந்தன. மத்தியதரைப் பிரதேசம், ஆப்பிக்கா, தென்கிழக்காசிய நாடுகள் ஆகியவற்றிற்கு இடையே நடைபெற்ற வணிகத்தின் மையப்பகுதியாக இவை விளங்கின. இங்கே கிடைத்த மூலப்பொருள்களும் தமிழத்தை முன்னிலைக்கு இட்டுச் சென்றன. வணிக நடவடிக்கையினைத் தொடர்ந்து கலை பண்பாட்டுப் பரிமாறல்களுக்கு வழி பிறந்தது. இதனால் விவசாய சமூகமாக இருந்த தமிழகச் சமூகம், வாணிகச் சிறப்பால் பிற நாகரிகங்களின் கலை-பண்பாட்டுப் பரிமாற்றங்களுடன் உள்ளாகும் வாய்ப்பைப்பெற்றது. இத்தகைய பங்கினை வகித்தது என வாதிடுவோருமுளர்.
- பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்:
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்:
பண்டைய தமிழகம் பக்கம். 31

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக