வெள்ளி, 15 ஜூலை, 2011

இரசினியிடம் நலம் உசாவினார் கருணாநிதி


வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது. தானே நலம் உசாவி விட்டு மரியாதை கருதித் திரும்ப நலம் உசாவியதைச் செய்தியாக வெளியிடும் நிலைக்கா மாபெரும்  இயக்கத்தின் மாபெரும்தலைவர் தாழ்ந்து விட்டார்.தன்மதிப்பை (சுயமரியாதையை) மக்களிடம் தோற்றுவித்த கட்சி எதனால் தன்மதிப்பிழந்து போனது என்பதை உரியவர்கள்  இனியேனும் உணர்ந்து தன்மானத்துடன் நடந்து கொண்டால் நன்று.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
ரஜினியிடம் நலம் விசாரித்தார் கருணாநிதி

First Published : 15 Jul 2011 03:13:43 AM IST


சென்னை, ஜூலை 14: சிங்கப்பூரில் சிகி ச்சை பெற்று சென்னை திரு ம்பியுள்ள நடிகர் ரஜினிகாந்திடம், திமுக தலைவர் கருணாநிதி வியாழக்கிழமை மாலை நலம் விசாரித்தார்.
சென்னை கேளம்பாக்கம் பண்ணை இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கருணாநிதி, அவரது உடல்நிலை குறித்தும், அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றியும் கேட்டறிந்தார். மருத்துவர்களின் பரிந்துரைப்படி உடல்நலத்தைப் பேண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதற்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த், கருணாநிதியின் உடல் நலம் குறித்தும், கனிமொழியின் நலம் குறித்தும் விசாரித்ததாக, திமுக தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக