வெள்ளி, 12 அக்டோபர், 2012

JHU monks besiege historic Munneasvaram Siva temple in Chilaapam

JHU monks besiege historic Munneasvaram Siva temple in Chilaapam

[TamilNet, Thursday, 11 October 2012, 17:16 GMT]
The Sinhala Buddhist extremist monks party, Jathika Hela Urumaya (JHU), which is a constituent of the Sri Lankan President Mahinda Rajapaksa's ruling United Peoples Freedom Alliance (UPFA), has been blocking the construction of ten-storied front tower (Rajakoapuram) of the several centuries old Munneasvaram Siva temple in Chilaapam (Chilaw) district in the North Western Province, according to the chief priest of the koayil, Mr Pathmanabakurukka'l.

Pathmanaba kurukka'l has said that the temple authority had made an application to the Madampe Divisional Secretary in May 2012 seeking permission for the construction of the front tower to the ancient temple.

However, Madampe DS has not given permission to the temple authority up to now.

During the preliminary work for the Rajagopuram construction, an ancient scripture was found and the Department of Archaeology has now said it belongs to Buddhist culture.

Meanwhile, Buddhist monks have begun to claim that a Bo tree found in the site proved that the area where the ancient Hindu temple is situated belongs to Buddhists and that no foundation should be constructed at the place for the Rajakoapuram.

The Saiva community in the area is perturbed over the twist of the history of the koayil by Buddhist monks and the SL Department of Archaeology.

The temple sources quote a statement made by the Jathika Hela Urumaya parliamentarian Ven. Ellewela Meththananda Thera to the media that the site where Munneasvaram temple is situated is a ‘sacred area’ for Buddhists.

Further, Buddhist monks say that the place where Vinaayakar temple is situated was earlier used by Buddhist monks as their residence and the Cheddiyaar Madam was used as Buddha Chaitya.

Temple sources say no permission is needed from the Divisional Secretary of the area to construct a Vihare but permission is needed for the construction of a Saiva temple in the traditioal Tamil homeland, which is under the colonial occupation by the Sinhala Buddhist unitary state in Colombo.

Chronology:

பெண்ணையாற்றில் 50 அடி ஆழம் மணல் சுரண்டல்: sand theft in govt. quarry

பெண்ணையாற்றில் 50 அடி ஆழம் மணல் சுரண்டல் : அரசு  கல் சுரங்கத்தில்  அட்டூழியம்

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த, கள்ளிப்பட்டு பெண்ணையாற்றில், விதிமுறைகளை மீறி, 50 அடி ஆழம் வரை, மணல் அள்ளுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதித்து, விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த, கள்ளிப்பட்டு ஊராட்சி எல்லை பெண்ணையாற்றில், அரசு மணல் குவாரி, இரு ஆண்டுகளாக செயல்படுகிறது. கள்ளிப்பட்டு குவாரி நடத்துபவர்கள், அவர்களுக்குச் சொந்தமான, 100 டிப்பர் லாரிகள் மூலம், தினமும் இரவு, பகல், விடுமுறை நாட்கள் என, பாராமல் மணல் அள்ளுகின்றனர்.
2 யூனிட் மணல், 624 ரூபாய்க்கு வாங்கி, கண்டரக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள, இரண்டாம் மணல் விற்பனை நிலையத்தில் கொட்டி, அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர்.
தினமும், கள்ளிப்பட்டு மணல் குவாரியில் இருந்து, ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் அள்ளும் பணி நடந்து வருகிறது. இங்கு, அரசு அனுமதித்த, 1 மீ., ஆழம் என்பது, பதிவேடு அளவிலேயே உள்ளது. விதிமுறைகளை மீறி, 50 அடி ஆழத்திற்கு, கள்ளிப்பட்டு ஊராட்சியில் துவங்கி, அக்கடவல்லி ஊராட்சி எல்லை வரை, பெண்ணையாறே காணவில்லை என்பது போல், மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதை, மாவட்ட அளவிலான அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால், இப்பகுதியைச் சுற்றியுள்ள கண்டரக்கோட்டை, புலவனூர், மேல்குமாரமங்கலம், கரும்பூர் உட்பட, 100 கிராமங்களில் உள்ள, விவசாயக் கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம், கணிசமாகக் கீழிறங்கி விட்டது. ஆழ்குழாய் கிணறுகள், இதுவரை இருந்த, 70 அடி ஆழம், தற்போது, 100 அடி ஆழத்திற்கும் கீழே இறங்கி விட்டன. கள்ளிப்பட்டு குவாரி, இதே வேகத்தில் இயங்கினால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைவது மட்டுமல்லாது, விவசாயம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுவது உறுதி.

மின்மாற்றிகளில் தானியங்கி அலகு கணணக்கி : வீடுகளிலும் பொருத்த மின்வாரியம் திட்டம் - automatic reading meter

மின்மாற்றிகளில் தானியங்கி அலகு  கணக்கி :வீடுகளிலும் பொருத்த மின்வாரியம் திட்டம்

ஈரோடு: ஈரோடு மண்டல மின்வாரிய டிரான்ஸ்பார்ம்களில், மின் இழப்பை (லைன் லாஸ்) கணக்கிட, தானியங்கி ரீடிங் மீட்டர் பொருத்தும் பணி துவங்கியது. தமிழகத்தின் மொத்த மின் நுகர்வில், 30 முதல், 40 சதவீதம் வினியோகத்தின் போது, லைன் லாசில் வீணாகிறது. இதை சரி செய்தால் மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். இதற்கான நடவடிக்கைகளில் மின்வாரியம் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக லைன் லாசை துள்ளியமாக கணக்கிடும் வகையில், மாநிலம் முழுவதும், மின் வினியோகத்துக்கு பயன்படும், டிரான்ஸ்பார்மர்களில், "தானியங்கி ரீடிங் மீட்டர்' பொருத்த திட்டமிடப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு, மீட்டர் கொள்முதல் பணிகள் நிறைவடைந்து, பொருத்தும் பணி துவங்கியுள்ளது. ஈரோடு மண்டலத்தில், ஈரோடு, சேலம், கோபி, மேட்டூர், நாமக்கல் ஆகிய மின் பகிர்மான வட்டங்கள் உள்ளன. ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில், 4,000க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்ம்கள் உள்ளன. இவற்றில், தேர்வு செய்யப்பட்ட, 878 டிரான்ஸ்ஃபார்ம்களில் அக்கருவி பொருத்தும் பணி நேற்று துவங்கியது.

டிரான்ஸ்பார்மின் ஒரு பகுதியில், மீட்டரை பொருத்திவிடுகின்றனர். டிரான்ஸ்பார்மரில் இருந்து வினியோகிக்கப்படும் மின்சாரத்தின் அளவு மீட்டரில் பதிவாகும். இந்த ரீடிங் பதிவுகளை வழக்கம் போல, ஆட்கள் நேரில் சென்று குறிப்பெடுக்காமல், நேரடியாக மின்வாரிய அலுவலக கணினிக்கு வருவது போல, மீட்டரில், "சிப்' ஒன்றை பொருத்தி கட்டுப்படுத்தும் தானியங்கி அமைப்பையும் ஏற்படுத்துகின்றனர். டிரான்ஸ்பார்ம் ரீடிங்கையும், வீடுகளிலுள்ள மீட்டரில் வழக்கமாக எடுக்கும் ரீடிங் அளவையும், ஒப்பிட்டுப் பார்த்து, "லைன் லாஸ்' அளவை துள்ளியமாக தெரிந்துகொள்வர். அதன்பின், தொழில்நுட்ப ரீதியாக லாஸை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், முதற்கட்ட டிரான்ஸ்பார்ம்களில் ரிமோட் கன்ட்ரோல் ரீடிங் எடுக்கப்படுகிறது. ஈரோடு மட்டுமின்றி, இம்மண்டலத்திலுள்ள, பிற மின் பகிர்மான வட்டங்களிலும் டிரான்ஸ்பார்மர்களில், "தானியங்கி ரீடிங் மீட்டர்' பொருத்தும் பணி துவங்கி நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்த பின், வீடுகளிலுள்ள மின்வாரிய மீட்டர்களிலும், "சிப்' பொருத்தி, தானியங்கி ரீடிங் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: முதற்கட்டமாக டிரான்ஸ்பார்ம்களில், தானியங்கி ரிடிங் மீட்டர் பொருத்தி, "லைன் லாஸ்' கணக்கி பணி துவங்கியுள்ளது. இப்பணிகள் முழுமைப் பெற்று, தானியங்கி ரீடிங் முறை சிறப்பாக நடந்தால், வீடுகளிலுள்ள மீட்டர்களிலும், "சிப்' பொருத்தி, தானியங்கி ரீடிங் செய்யப்படும். இதற்கு, இன்னும் ஆறு மாதம் ஆகலாம். இதன்மூலம் நேரடியாக சென்று ரீடிங் எடுக்க வேண்டியதில்லை. ஊழியர் பற்றாக்குறை பிரச்னையும் இருக்காது. ஓரிரு ஆண்டுக்கு பின்பே அனைத்து வீடுகளிலுள்ள மீட்டர்களை தானியங்கி ரீடிங் வசதியை செய்யலாம் என்றனர்.


மின் தடை பற்றி கவலைப்படாமல் இருக்க...:

சொல்கிறார்கள்


 மின் தடை பற்றி கவலைப்படாமல் இருக்க...: 

தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை துணைப் பொது மேலாளர் சையத் அகமத்: பூகோள அமைப்பின் சாதகத்தால், தமிழகத்தில் சூரிய சக்தி அதிகளவில் கிடைக்கிறது. அதைக் கொண்டு, மின்சாரம் பெறலாம். மக்கள் இதற்கு தயக்கம் காட்டுவதற்குக் காரணம், அதிகப்படியான ஆரம்ப கட்ட முதலீடு தான். அதனால் தான், மத்திய அரசு அதிக பட்சம், 40 சதவீதம் வரை, மானியம் வழங்க முன் வந்துள்ளது. வீட்டு மின் சாதனங்களை, 12 மணி நேரம் பயன்படுத்த, 1 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதை சூரிய ஒளி மூலம் பெற, "சோலார்' தகடுகள் மற்றும் "பேட்டரி' அமைப்பதற்கு, இரண்டு லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும். மானியமாக, 81 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். மீதமுள்ள, 1.19 லட்சம் ரூபாயை, நாம் தான், செலவு செய்ய வேண்டும். பேட்டரி இல்லாமல், மின்சாரத்தை நேரடியாகப் பயன்படுத்தும் வகையிலான சாதனத்தை அமைக்க, 25 ஆயிரம் ரூபாய், மானியம் வழங்குகிறோம். "சோலார்' தகடுகளை, லட்சங்களில் தான் அமைக்க வேண்டும் என்பதில்லை. ஒரு மின்விசிறி, ஒரு மின் விளக்கு என, மின் தேவையை சுருக்கிக் கொண்டால், குறைந்தபட்சம், 20 ஆயிரம் ரூபாயில் கூட, சோலார் தகடுகள் அமைக்கலாம். கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு, அதிக பட்சமாக, 100 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதற்கான "சோலார்' தகடுகள் அமைக்க, 1.8 கோடி ரூபாய் செலவாகும். மானியத் தொகையாக அதிகபட்சம், 72 லட்சம் ரூபாய் கிடைக்கும். மானிய அறிவிப்பிற்கு முன்னதாக, தாங்களாகவே, "சோலார் பிளான்ட்'டை வீட்டில் நிறுவி இருப்பவர்கள், எங்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம், அதை செயல்படுத்தியிருந்தால், அவர்களுக்கும் மானியம் உண்டு. "சோலார் பிளான்ட்'டை வீடுகளில் ஏற்படுத்தித்தர, இதுவரை, 90க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு, அங்கீகாரம் வழங்கி உள்ளோம். இதில் முக்கியமான விஷயம், ஒவ்வொரு ஆண்டிலும் அக்., மாதம் மட்டுமே, ஆன்-லைன் மூலம், மானியம் பெற விண்ணப்பிக்க முடியும்.

செங்கற் களஞ்சியமாகும் நெற்களஞ்சியம் : rice bowl thanjavur turns into bricks bowl




தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விவசாயத்தை கைவிட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகள் பலர், கிடைக்கும் காவிரி நீரை பயன்படுத்தி, செங்கல் தயாரிக்கும் பணியில் ஆர்வம் செலுத்த துவங்கியுள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தில், பெயர் சொல்லும் அளவிற்கு பெரிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லாத நிலையில், விவசாயம் மட்டுமே இங்கு முக்கிய தொழில்.
பாசனம்:


மேட்டூர் அணையில் இருந்து வரும் காவிரி நீர், இங்குள்ள காவிரி, வெண்õறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் பாய்ந்து, அதன் மூலம் தான் பாசனம் நடக்கிறது. காவிரி மூலம், 4.69 லட்சம், வெண்ணாறு மூலம், 4.65 லட்சம், கல் லணை கால்வாய் மூலம், 2.56 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இம்மாவட்டத்தில், குறுவை, சம்பா, தாளடி ஆகிய மூன்று காலங்களில் நெல் மட்டுமே பிரதானமாக, விளைச்சல் செய்யப்படுகிறது. குறுவை சாகுபடி, 75 ஆயிரம் ஏக்கர் நிலத்திலும், சம்பா சாகுபடி, 3 லட்சம் ஏக்கர் நிலத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. கடந் தாண்டு, 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடியும், இரண்டு லட்சம் ஏக்கர் நிலத்தில், சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டன.
பாதிப்பு:


50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில், கரும்பு, உளுந்து, துவரை, பச்சைபயிறு, எள், பஞ்சு உள்ளிட்ட பயிர்கள், விவசாயம் செய்யப்பட்டன. ஆனால், கடந்த ஜூன் மாதம், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து, காவிரி நீர் திறக்கப்படவில்லை. ஜூன் மாதம் முதல், செப்., மாதம் வரை, குறுவை, சம்பா சாகுபடிகளுக்கு, நியாயப்படி வழங்க வேண்டிய, 137 டி.எம்.சி., தண்ணீரையும், கர்நாடக அரசு, வாரம் மற்றும் மாத வாரியாக, முறைப்படி வழங்கவில்லை. காவிரியில் நீர் திறக்கப்படாததால், இந்தாண்டு, 10 ஆயிரம்
ஏக்கருக்கும் குறைவாகவே, தஞ்சாவூரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது, சம்பா சாகுபடி காலம் துவங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, காவிரியில் இருந்து, கடந்த, 29ம் தேதி முதல், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டது. இம்மாதம், 15ம் தேதி வரை, தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத் தரவு இருந்தும், கடந்த, 8ம் தேதி இரவுடன், தண்ணீர் நிறுத்தப்பட்டது. இருப்பினும், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து, தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் போதுமான அளவில் இல்லாததாலும், விவசாய தொழில் நலிவுற்று வருவதாலும், இம்மாவட்ட விவசாயிகள் பலர், வேறு தொழில் களுக்கு தாவி வருகின்றனர். காவிரி, வெண்ணாறு படுகைகளை ஒட்டிய விவசாயிகள் பலர், செங்கல் தயாரிப்பு தொழிலில் களமிறங்கியுள்ளனர். விவசாயத்தை போல, கூலித்தொழிலாளர்களை நியமிக்காமல், பலர், குடும்பம், குடும்பமாகவே செங்கல் தயாரிப்பு தொழிலை செய்கின்றனர்.
விறுவிறுப்பு:


களிமண்ணில் இருந்து செங்கல் அறுக்கும் பக்குவம் தெரியாதவர்கள் மட்டுமே, இத்தொழிலில் தேர்ச்சிப் பெற்ற ஒரிருவரை, துணைக்கு வைத்துக் கொண்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில், செங்கல் தயாரிப்பு தொழில், விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான செங்கல் தயாரிப்பு சூளைகள், ஆற்றுப் படுகைகளில் அமைக்கப் பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் மட்டும், மாதந்தோறும், 10 லட்சம் செங்கற்கள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் செங்கற்கள், தஞ்சாவூர் மட்டுமின்றி, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களின், கட்டுமான தேவைக்காக அனுப்பப்படுகிறது. செங்கல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தஞ்சாவூர் தாலுகா, கூடலூரை சேர்ந்த தேவா, 42, என்பவர்
Advertisement
கூறியதாவது:
லாபம்:


விவசாயத்தை விட செங்கல் தயாரிப்பு தொழிலில் லாபம் கிடைக்கிறது. மேலும், இதற்கு விவசாயத்தை விட, தண்ணீர் பயன்பாடு குறைவு என்பதால், இந்த தொழிலை நாங்கள் ஆர்வமுடன் செய்கிறோம். இத்தொழிலில், நேரத்திற்கு ஏற்ப, 10 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை, லாபம் கிடைக்கிறது. பருவமழை துவங்குவதற்குள், சூளையை எரிய வைத்து விட்டால், பின், கவலைப்பட தேவைஇல்லை. ஒரு மாதத்திற்கு முன், செங்கல் ஒன்றின் விலை, 2.80 ரூபாய்க்கு விற்றோம்; இப்போது தேவை அதிகம் இருப்பதால், 3.50 ரூபாய்க்கு விற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆற்றுப்படுகையில் மீன் குழம்புவாசம்:


செங்கல் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சூரிய வெயில் அதிகரிப்பதற்கு முன், அதிகாலையிலேயே, ஆற்றுப் படுகைகளுக்கு குடும்பத்துடன் வந்து விடுகின்றனர். அங்கு, ஒருபுறம் மண் குழைத்தல், அச்சில் கல்அறுப்பு, விறகு சேகரிப்பு, சூளைக்கு கல் அடுக்குதல் போன்ற பணிகள் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் சமையல் வேலையும் நடக்கிறது. அங்கேயே, களிமண்ணால் அடுப்புகள் அமைத்து, அதில் சட்டி, பானைகளை வைத்து சமையல் செய்கின்றனர். திறந்த வெளியில், சமைக்கும்போது, காற்று வேகத்தால் பாத்திரங்கள் கரி படிந்துவிடும் என்பதால்தான், சட்டி, பானைகளை பயன்படுத்துவதாக இவர்கள் கூறுகின்றனர். இவர்கள் தயாரிக்கும் மதிய உணவுகளில், மீன் குழம்பு அல்லது வறுவல் பிரதானமாக இடம் பெறுகிறது. மாலை நேரங்களில் சிற்றுண்டியாக, அவித்த மரவள்ளி கிழங்கு, வேர் கடலை, வாழைப்பழம் ஆகியவற்றையும் ருசிக்கின்றனர். சூளை பணிகளை துவக்கும் முன்பும், செங்கற்களை விற்பனைக்கு இறக்கும்போதும், ஆட்டுகிடா வெட்டி, குலதெய் வத்தை வணங்குவதையும் பலர் பின்பற்றுகின்றனர்.
- தினமலர் செய்தியாளர்-